"

Thursday, January 30, 2020

கொரோனா வைரஸ் என்பது என்ன?.. நம்மை பாதிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வழிகள்

Coronavirus Symptoms, Causes, Treatments

விலங்குகளிடம் பொதுவாக காணப்படும் பெரிய வைரஸ் குழுவாக இது கருதப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் முன் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் தகவலின் படி, இந்த வைரஸ்கள் விலங்குகளின் வழியாக, அதாவது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடும். 
ஆசியா உட்பட உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று மருத்துவர் சபரிநாத் விளக்கியிருக்கிறார். 

உடல்நலக்குறைவாக இருப்பது போன்ற பொதுவான உணர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இந்த வைரஸ் உடலினுள் இருக்கும்போது மூக்கு ஒழுகும், தொண்டையில் புண் ஏற்படும். தலைவலி மற்றும் காய்ச்சல் இருக்கும். இதே அறிகுறிகள் ஃப்ளூ காய்ச்சலுக்கும் சில நாட்கள் இருக்கும். பின்னர் போய்விடும். கோரோனா வைரஸ் சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டால் மரணத்தை ஏற்படுத்தக் கூடும்.

இந்த வைரஸ் தொற்றிய விலங்குடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளும்போது இந்த வைரஸ் அவர்களுக்கும் பரவும். அதன் பின்னர் இது இன்னொரு ஆரோக்கியமான மனிதருக்கு சளியின் மூலமாக பரவும். இருமல், தும்மல், கைகுலுக்கல் அல்லது வைரஸ் தாக்கப்பட்ட மனிதரை தொடுவதன் மூலம், அதன் பின்னர் உங்கள் கையை உங்கள் வாயில், கண்ணில், மூக்கில் வைத்தால் பாதிக்கப்படும்.

கொரோனா போன்ற வைரஸ் உள்நுழைந்தால், அவற்றுடன் பாக்டீரியாக்களும் சேர்ந்துகொள்வதால் நாம் சுத்தத்தை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இவற்றையும் மீறி, மூச்சு வாங்கும் அளவுக்கு சிரமம் ஏற்பட்டால் மட்டும் மருத்துவமனையை அணுகலாம். ஆனால் உடலில் சர்க்கரை உள்ளிட்ட ஏதேனும் ஒரு நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியிடங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ தேவையில்லாமல் செல்வதைத் தவிர்க்கலாம். 

மருத்துவர் சபரிநாத் சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

1. உடலில் நுழையும் இந்த கொரோனா வைரஸ், பன்மடங்காக பெருகி உடலில் இருக்கும் நீர்ச்சத்தினை குறைக்கிறது. ஆகையால் சாதாரணமாக குடிக்கும் நீரை விட, தற்போதைய சூழலில் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிரிக்க வேண்டும்.
2. முதலில் N-95 என்கிற மாஸ்க்கை(முகமூடி) அணிந்துகொள்ள வேண்டும். வெள்ளை கலரில் இருக்கும் இந்த மாஸ்க்கைத்தான் பன்றிக்காய்ச்சலின்போது பயன்படுத்துகிறார்கள். 3 நாட்களுக்கு ஒருமுறை இந்த மாஸ்க்கை மாற்றவும் வேண்டும். குறிப்பாக மருத்துவர்களும், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோய்த்தொற்று உள்ளவர்கள் இந்த மாஸ்க்கை அணியலாம்.
3. பொவிடோன் அயோடின் 5 மிலியும், கல் உப்பை சிறிதளவும் சுடு தண்ணியில் போட்டு கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரை தொண்டை வரை குடித்து கொப்பளித்து துப்ப வேண்டும்.
4. வாய் சுத்தம் அவசியம். வாய்சுத்தம் செய்வதற்கான திரவங்களை மெடிக்கலில் வாங்கி கொப்பளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Adbox