"

Thursday, January 24, 2019

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ்!



வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பங்கேற்றுள்ளனர் .இதன் ஒருபகுதியாக மாவட்ட தலைநகரங்களில் திரண்ட அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் சிலர் கைது செய்யப்பட்டனர்.  

இந்நிலையில் ஆசிரியர்கள் வரும் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பணிக்கு திரும்புவதா அல்லது போராட்டத்தை தொடர்வதா என்பது குறித்து இன்று பிறபகல் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சார்பில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் போராட்டம் தொடர்ந்து நடத்த வேண்டுமென தெரிவித்தனர். 

ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 17பி பிரிவின் கீழ் உரிய விளக்கம் அளிக்கம் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment

Adbox