"

Tuesday, January 22, 2019

தானியங்கி எந்திரம் மூலம் பிரியாணி பரோட்டா போன்ற உணவுகள் வினியோகம்



சிங்கப்பூரில் சகுந்தலா உணவகம் தானியங்கி முறையில் பரோட்டா பிரியாணி போன்ற சுவையான இந்திய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. தொழிற்சாலை மற்றும் பள்ளி வளாகங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த உணவகம் ஆனது காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் தானியங்கி முறையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. 

ஒரு பொத்தானை இயக்குவதன் மூலமாக தங்களுக்கு விருப்பமான உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த உணவானது பள்ளி மாணவர்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கலோரி குறைந்த உணவுகளை தயாரித்து வழங்குவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox