"

Sunday, August 5, 2018

இத்தனை வியக்கத்தகு நன்மைகளா இந்த ஜாதிக்காயில்... என்ன நன்மைகள் பார்ப்போம்.. !



மூலிகைகள் பழங்கள் காய்கறிகள் மற்றும் உணவு முறைகளைக் கொண்டு இயற்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு முறைகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று ஜாதிக்காய், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஜாதிக்காய் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. 

குறிப்பாக ஜாதிக்காய் ரத்த வெள்ளை அணுக்களை அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய தன்மை உடையது. இது ரத்த புற்றுநோய் குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் ரத்தத்தில் கொழுப்பை அண்டவிடாமல் தடுக்கும். இதில் உள்ள குறிப்பிட்ட வகை பொருள் நரம்பு மண்டலத்தை சீரமைக்கும் பண்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ஜாதிக்காய் சோர்வான நிலையை உள்ள பொழுது பயன்படுத்தி வந்தால் மூளைச் செல்கள் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக இயங்க வைக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. 

நெய்யில் வருத்த ஜாதிக்காய் பொடியை சிறிதளவு பாலில் சேர்த்து பருகும் பொழுது தூக்கமின்மையால் அவதிப்படுவர்களுக்கு ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக பயனளிக்கிறது. மேலும் ஜாதிக்காய் தேனில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு மற்றும் அதன் வடுக்கள் மறைந்து பொலிவைத் தருகிறது. ஜாதிக்காயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கிறது. இதில் உள்ள இரும்பு காது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை பெற்றுள்ளது. 

சிறிதளவு ஜாதிக்காய் பொடியை உறங்கும் முன் தண்ணீர் உடன் பருகும் பொழுது மலச்சிக்கலை சரி செய்யும். ஜாதிக்காய் பொடி ஒரு ஸ்பூன், பனங்கற்கண்டு மற்றும் சிறிது ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்கவைத்து அதை தேநீராக பருகி வந்தால் விந்தணு குறைபாடு உள்ளவர்களுக்கு குறைபாட்டைப் போக்கி அதிகளவு விந்து உற்பத்தியாகும் திறனை அளிக்க கூடியதாக இந்த தேநீர் உள்ளது. எனவே ஆண்மை குறைபாடு உடையவர்கள் இந்த தேநீரை பருகினால் ஆண்மை குறைபாடு நீங்க விந்தணு உற்பத்தி மேம்படும்.

No comments:

Post a Comment

Adbox