"

Saturday, June 16, 2018

தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களை கைவிடுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்..?


எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு  ஜூலை 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை பெற்று அதனை கைவிடுபவர் 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடங்களைப் பெறும் மாணவர்கள் ஆகஸ்ட் 2 முதல் 19 தேதிகளில் கைவிட்டால் ஒப்பந்தத்தை மீறி எதற்காக ஒரு லட்ச ரூபாயும், ஆகஸ்ட் 19ம் தேதிக்குப் பிறகு கைவிட்டால் பத்து லட்ச ரூபாயும் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox