"

Monday, May 13, 2019

குழந்தையின்மை கவலைக்கு பலன் தரும் தாவரம், இத்தனை நாள் களை என ஒதுக்கிவைத்த தாவரம்தான் தீர்வா..?


குழந்தையின்மை பாதிப்பை போக சப்பாத்திக்கள்ளி ஒரு சிறந்த தீர்வாகும்

இன்றய காலத்தில் நமது சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாகவும் மற்றும் நமது உணவு முறைகளின் காரணமாகவும் பலர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குழந்தையின்மை பாதிப்பை போக நமது கிராமங்களில் கேட்பாரற்று கிடைக்கும்  சப்பாத்திக்கள்ளி ஒரு சிறந்த தீர்வாகும். இந்த பழத்தை சாப்பிட்டு வந்தாலே விரைவில் நல்லபலன் கிட்டும். இந்த சப்பாத்திகள்ளி பழம் அதிக அளவு  உடலுக்கு அதிகளவு சத்துக்களை கொண்டு உள்ளது.

சப்பாத்திகள்ளி செடியில் அதிக முள் நிறைந்த தாவரம், இந்த பழத்தை கவனமாக பறித்து அதனை தரையில் நன்றாக தேய்த்து மேலே இருக்கும் முட்களை நீக்கிய, பின்னர் பழத்தின் உள்ள இருக்கும் நட்சத்திர வடிவில் இருக்கும் தொண்டை முள்ளை வெளியே எடுத்து  அந்த பழத்தை சாப்பிட வேண்டும்.

இந்த பழம் மற்றும் விதையானது அதிகளவு இனிப்பு சுவையுடனும்., நல்ல சிவந்த நிறத்திலும் இருக்கும். இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலமாக பெண்களுக்கு கருமுட்டையானது நன்றாக வளரும்., ஆண்களுக்கு உயிரணுக்களானது நன்றாக வளரும்.

அதோடு இல்லாமல் உடலில் இரத்த விருத்தியானது அதிகரிக்கும். சப்பாத்திகள்ளி பழம் குங்கும பூவை விட சிறந்த பூவாகும். இதனை சாப்பிடுவதன் மூலமாக கருப்பை சுத்தமாகும்., ஆண்களுக்கு ஆண்மையானது அதிகரிக்கும். இந்த பழத்தை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனையானது முற்றிலும் நீங்கும்.இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வரும் சமயத்தில் இனிப்பு சுவையுள்ள பொருட்களை சாப்பிட கூடாது. குறிப்பாக இந்த பழத்தை குளிர்பதன பெட்டியில் வைத்து சாப்பிட கூடாது.

No comments:

Post a Comment

Adbox