"

Monday, May 6, 2019

" வேம்பு இலை, பூ மற்றும் கனி ஓர் இயற்கை அளித்த பொக்கிஷஹம் " மருத்துவ பலன்கள் பயிற்றி பார்ப்போம்

Medical benefit of neem tree

இயற்கை அளித்த பொக்கிஷங்களில் ஒன்று  வேம்பு. இதன்  இலை, பூ மற்றும்  கனி மனிதனுக்கு பல்வேறு மருத்துவ பலன்களை தருகிறது. அவைகளை விளக்கமாக காண்போம்.


"வேம்பு" என்று அழைக்கப்படும் வேப்ப மரத்தை அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இதனை சக்தியின் அம்சமாகவும் கருதி தலை முறை, தலை முறையாக மக்கள் பாதுகாத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது தான். மனிதர்களுக்கு ஊரு விளைவிக்கும் நுண்ணிய கிருமிகளை அழிக்க வல்லது. 

இதில் இருந்து தற்காலங்களில் சோப்புகள் கூட தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் முக்கிய மூலிகைகளில் முதன்மையானது இந்த வேம்பு என்று சொன்னால் அது மிகை ஆகாது. இது மருத்துவ உலகில் மார்க்கோசா மற்றும் நீம் என்று அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் கூட வேப்பங்குச்சியில் பற்களை சுத்தம் செய்யும் வழக்கம் வெகுவாகப் பரவி வருகிறது.

மருத்துவ பலன்கள்


மாதம் ஒரு முறை வேப்பம்பூ ரசம், துவையல் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக சித்திரை மாதம் துவங்கும் சமயம் அதிகளவில் வேப்பம் பூக்களை மரத்தில் காணலாம்.

வேப்பம் பூவை உண்டு வந்தால் வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும்.

வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம் பழத்தை சாப்பிடுங்கள். பூச்சிகள் வெளியேறிவிடும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்தத்தால் வரும் மயக்கம் குணமாகிவிடும்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

சர்க்கரைவியாதியை கட்டுக்குள் கொண்டுவர தினமும் வேப்பங்க்காயை சாப்பிட்டு வாருங்கள். மாத்திரையின்றி கட்டுக்குள் கொண்டு வரலாம்.

வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரையை சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தீராத தொழுநோய் முதலான அனைத்து சரும வியாதிகளும் குணம்டையும்.

வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் விலக்க. பல் சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.
3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.

வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும்.

.






No comments:

Post a Comment

Adbox