"

Tuesday, April 16, 2019

வரலாற்றில் இன்று ஏப்ரல் 16 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஏப்ரல் 16 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1346 – தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது.
1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1582 – ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன் ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான்.
1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
1876 – பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.
1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 – ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.


1917 – நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.
1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
1925 – பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.
1947 – சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.
1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1660 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753)
1848 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர் (இ. 1919)
1851 – சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
1867 – வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)


1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (இ. 1977)
1927 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 265வது திருத்தந்தை
1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
1947 – கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1951 – ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)
1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி
1961 – ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதல்வர் (இ. 2014)
1963 – சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
1971 – செலெனா, அமெரிக்க பாடகி (இ. 1995)
1973 – எகான், அமெரிக்க நடிகர்
1978 – லாரா தத்தா, இந்திய நடிகை
1986 – பவுல் டி ரெஸ்டா, ஸ்கொட்டிய வாகன ஓட்டப் பந்தய வீரர்
இறப்புகள்
1828 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய ஓவியர் (பி. 1746)
1879 – பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1844)
1888 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)
1958 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1920)
1970 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)
1972 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
2007 – கோ. வா. இலோகநாதன், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட இந்திய-அமெரிக்கர் (பி. 1954)
2007 – சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்
2013 – சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)

சிறப்பு நாள்
சிரியா – விடுதலை நாள் (1946)

No comments:

Post a Comment

Adbox