"

Wednesday, February 27, 2019

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1560 – ஸ்கொட்லாந்தில் இருந்து பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.
1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.
1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1801 – வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
1844 – டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1861 – போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
1879 – சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
1900 – இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் போவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையயின்றி சரணடைவதாக அறிவித்தார்.
1900 – பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
1933 – பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1940 – ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.
1951 – ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
1967 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவெய்த் விடுதலையானதாக அறிவித்தார்.
2002 – குஜராத் வன்முறை 2002: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2004 – பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.


பிறப்புகள்
272 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரரசர் (இ. 337)
1912 – குசுமாகரசு, இந்திய எழுத்தாளர் (இ. 1999)
1932 – எலிசபெத் டெய்லர், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)
1934 – ரால்ஃப் நேடர், அமெரிக்க அரசியல்வாதி
1944 – கிரகாம் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்
1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன், அமெரிக்க இயக்குநர்
1977 – ஜேம்ஸ் வான், மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்
1982 – புருனோ சோரெசு, பிரேசிலிய டென்னிசு வீரர்
1983 – முகமது நபௌசு, லிபிய ஊடகவியலாளர் (இ. 2011).


இறப்புகள்
1921 – இசுக்கோஃபீல்ட் ஹை, ஆங்கிலேயது துடுப்பாளட் (பி. 1871)
1931 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)
1936 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)

2008 – சுஜாதா, எழுத்தாளர் (பி. 1935)
    2014 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929).


சிறப்பு நாள்
டொமினிக்கன் குடியரசு – தேசிய நாள்

No comments:

Post a Comment

Adbox