"

Monday, February 18, 2019

வரலாற்றில் இன்று பிப்ரவரி 18 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 18  உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1229 – புனித ரோம் பேரரசின் மன்னன் இரண்டாம் பிரெடெரிக் எகிப்திய மன்னன் அல்-கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டான்.
1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்ட்டிற்கு எதிராக சதி முயற்சியில் இறங்கியதற்காக அவனது சகோதரன் ஜோர்ஜ் (கிளாரன்ஸ் இளவரசன்) தூக்கிலிடப்பட்டான்.
1797 – ட்ரினிடாட் பிரித்தானியர்களிடம் வீழ்ந்தது.
1832 – இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.
1861 – அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.
1911 – முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.
1929 – முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
1930 – கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.
1932 – சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.
1957 – கென்யாவின் போராளித் தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1965 – காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1979 – தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை பெய்தது.
1991 – லண்டனில் தொடருந்து நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.
1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.
2003 – தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2004 – ஈரானில் இராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் 295 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த ‘சம்ஜவுதா’ விரைவு தொடருந்தில் குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1745 – வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)
1836 – ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886)
1860 – மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946)
1926 – வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)
1931 – டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.
இறப்புகள்
1546 – மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)
1564 – மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)
1967 – றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904).

No comments:

Post a Comment

Adbox