"

Wednesday, January 23, 2019

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் வேலை நிறுத்தத்தை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு...!


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்த வேலைநிறுத்தத்தால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கோரி பொதுநல வழக்கு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அதில் நீதிபதிகள் மக்கள் மற்றும் மாணவர் நலன் கருதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வருகின்ற ஜனவரி 25-ஆம் தேதிக்குள் அனைவரும் அவர்கள் பணிக்கு திரும்பிவிட வேண்டும். மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள விளக்கம் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

No comments:

Post a Comment

Adbox