"

Saturday, January 19, 2019

பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12 க்குள் முடிக்க உத்தரவு.


பள்ளிக்கல்வி தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. 

மேலும் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வுக்குரிய மற்ற படிவங்களை ஜனவரி 22 முதல் டவுன்லோட் செய்துகொள்ள உத்தரவிட்டுள்ளது. 

செய்முறைத் தேர்வுகளை பள்ளியின் முதன்மை கண்காணிப்பாளர் முன்னிலையில் அகமதிப்பீட்டாளர் மற்றும் புற மதிப்பீட்டாளர் தேர்வினை சிறப்பாக நடத்தி முடித்து மதிப்பெண் பட்டியலை பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox