"

Sunday, December 23, 2018

நாசாவில் இடம்பெற்ற தமிழக மாணவரின் ஓவியம்!


நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான நாள்காட்டியில் தமிழக மாணவர் வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது. உணவு என்ற தலைப்பில் பழனியை சேர்ந்த மாணவர் வரைந்த ஓவியம் நாசா நாள்காட்டியில் இடம்பிடித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவர் தேன்முகிலன். இவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சார்பில் நடத்தப்பட்ட ஒவியப்போட்டியில் பங்கேற்றார். விண்வெளியில் உணவு என்ற தலைப்பில் தேன்முகிலன் வரைந்த ஓவியத்தை நாசா குழுவினர் தேர்வு செய்து 2019ம் ஆண்டிற்கான நவம்பர் மாத அட்டைப்படத்தில் அச்சிட்டுள்ள்னர்.

No comments:

Post a Comment

Adbox