"

Thursday, April 5, 2018

IPL 2018 சென்னையில் நடத்தக்கூடாது -ஐபிஎல் போட்டிக்கு கிளம்பிய எதிர்ப்பு குண்டு

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது .சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் சூதாட்ட புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு தடை கோரிய வழக்கில், வரும் 13க்குள் பதிலளிக்க மத்திய அரசு, பிசிசிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

No comments:

Post a Comment

Adbox