"

Thursday, April 5, 2018

மனித உரிமைகள் ஆணையம் சம்மன் - இளைஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை

இளைஞரை போக்குவரத்து போலீசார் தாக்கிய சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் சம்மன் விடுத்து உள்ளது. தி. நகரில் இரண்டு பெண்கள் கண் முன்பு வாலிபரை போக்குவரத்து போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதில் வாலிபர் பிரகாஷ் மீது சப்–இன்ஸ்பெக்டரை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாகவும், அரசு உடைமையான வாக்கி–டாக்கியை உடைத்தாகவும் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் கைது செய்யப்பட்டார், இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ் விடுத்து உள்ளது. 

No comments:

Post a Comment

Adbox