வலைதளங்களில், ‘பிட்காயின்’ போன்ற மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்கு, ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதில், எண்ணற்ற கணினி ஒருங்கிணைப்புகள் வாயிலாக, மின்னணு கணக்கு புத்தகம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. அதாவது, எந்தவொரு பரிவர்த்தனை விபரமும், மையத் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு, வினியோகிக்கப்படுவதில்லை. பரிவர்த்தனை விபரங்கள், ஒட்டுமொத்த கணினி ஒருங்கிணைப்பிற்கு இடையே தான் நடக்கின்றன.இதன் காரணமாக, கணினி நாசகாரர்கள், கணினி மையத் தொகுப்பில் புகுந்து, தகவல்களை திருடும் வாய்ப்பு குறைவு.‘‘அதனால், பாதுகாப்பான பிளாக் செயின் தொழில்நுட்பத்தை, இணையம் சார்ந்த நில பத்திரப்பதிவு, மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றில் பயன்படுத்துவது தொடர்பாக, ‘நிடி ஆயோக்’ பரிசீலிக்கிறது,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரியின் சிறப்பு அதிகாரி, ஆலேக் ஷரன் தெரிவித்து உள்ளார்.‘‘பத்திரப்பதிவு திட்டத்திலும், நில உரிமைக்கான ஆவண பராமரிப்பிற்கும் உள்ள இடைவெளி தான், நில மோசடிக்கு வித்திடுகிறது. இதற்கு, பிளாக் செயின் முற்றுப்புள்ளி வைக்கும்,’’ என, ஆலோக் ஷரன் கூறினார்.
‘பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தில், தன்னிச்சையான செயல்பாட்டில் நடைபெறுகின்றன.இந்த தொழில்நுட்ப செயல்பாடு குறித்தும், தீவிரமாக ஆராய்கிறோம். வளரும் நாடுகள், இந்த தொழில்நுட்பத்தை, அங்கீகரிக்கப்பட்ட கரன்சி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணம் செல்லும் பாதையை கண்டுபிடிக்க, இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. அதனால், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஊழலை கட்டுப்படுத்தலாம்.
No comments:
Post a Comment