"

Saturday, March 21, 2020

ஏலக்காயை வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளை செய்யவும் பயன்படும் என்று தெரியுமா..?

நாம் ஏலக்காயை வெறும் வாசனைக்காக மட்டும் பயன்படுத்துகிறோம் என்று நினைக்காதீர்கள். அது நமது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது.

நீரிழிவு :
நீரிழிவு எனும் சர்க்கரை வியாதி கொண்டவர்கள் தேநீர் அருந்தும்போதுசர்க்கரைக்கு பதிலாக ஏலக்காயைத் தூள் செய்து தேநீரில் கலந்து குடித்து வந்தால்இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

வயிறு சார்ந்த பிரச்சனை:
நாம் உண்ணும் உணவை செரித்து சக்தியை அளிக்கும் முக்கிய உறுப்பானவயிறு சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமநிலையின்மை,

வாயுத்தொல்லை,அஜீரணம்,மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்க சிறிதளவு ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து பொடி செய்து தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் தீரும்.

கல்லீரல் :
நாம் உண்ணும் உணவில் மாமிச உணவுகளை அதிகளவு சாப்பிட்டு
வருவதாலும் அதிக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரலின் செயல்பாடுகளில் பாதிப்பை உண்டாக்கி உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.ஏலக்காயை தினந்தோறும் பொடி செய்தோ அல்லது முழுதாகவோ சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாட்டை சரி செய்யும்.

வலிப்பு :
வலிப்பு நோய் ஒரு சிலருக்கு பிறக்கும் போது நரம்பு மற்றும் மூளைகளில் ஏற்படும் ஒரு நோய் அல்லது குறைபாடு எனக் கூறலாம். கிராமப்புறங்களில்இந்நோயை காக்கை வலிப்பு என்பார்கள்.வலிப்பு வந்து நின்ற பிறகு ஏலக்காய் சார்ந்த உணவு பொருட்களை கொடுத்து வந்தால் வலிப்பு பூரண குணமாகும்.

கர்ப்பக்கால பிரச்சனை :
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைப் போக்க ஏலக்காயின் உள்ளிருக்கும்ஏலரிசியை நன்கு காய வைத்து பொடி செய்து பொடியுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து உணவில் உட்கொண்டு வந்தால் ஒரு சில நாட்களில் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தியை தடுக்கலாம்.

வயிற்றுவலி :
வயிற்றுவலிக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.சுக்கு, கிராம்பு,சீரகம் ஏலரிசியுடன் சேர்த்து சமஅளவு பொடி செய்து 2 கிராம் பொடியைதேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.

பற்கள் மற்றும் ஈறுகள் :
சர்க்கரை பொருள் அதிகம் உண்பதால் பற்களில் சொத்தை, ஈறு மற்றும் பற்களில் இருக்கும் கிருமிகளால் வாய் மற்றும் பற்கள் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.தினமும் உணவு சப்பிட்டு முடித்தவுடன் 1 அல்லது 2 ஏலக்காயை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் ஈறுகள் மற்றும் பற்கள் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

மன நலம் :
மனம் நன்றாக இருந்தால் உடலும் நன்றாக இருக்கும்.மனதில் ஏற்படுகின்ற கவலை, கோபம், பயம், மன அழுத்தம் போன்றவை உடல்நலத்தை கெடுக்கிறது.ஏலக்காய் தேநீர் பருகி வரும்போது ரசாயனங்கள் உடலின் மூளை செல்கள் மனம் மற்றும் உடலில் ஏற்பட்டிருக்கும் மனநிலையை சரிசெய்யும்.

ஜீரண சக்தி:
ஏலக்காய் மசாலா பொருளாக இருப்பது மட்டுமல்லாமல் ஒரு மூலிகை பொருளாகவும் பயன்படுகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.


No comments:

Post a Comment

Adbox