"

Tuesday, April 23, 2019

கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் மருத்துவ குணம் மிக்க இந்த பழத்தின் நன்மைகள் என்னென்ன என்று தெரியுமா?

முலாம்பழம் குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது


முலாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இதில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்க‌ளும், நார்ச்சத்தும் நிறைந்துள்ள‌து. முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு. 



அதனால், உடல் எடையைக் குறைத்து அழகான உடலமைப்பு பெற விரும்புகிறவர்களுக்கு ஏற்ற பழமாகவும் இருக்கிறது. ஏனெனில் இந்த பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்தது. இதனால், இதயம் தொடர்பான நோய்களையும், புற்றுநோயையும் தடுக்க ஏற்றதாகவும் உள்ளது. இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாகவும் உள்ளது. மேலும் இது நெஞ்செரிச்ச‌லைக் குறைக்கவும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. 

மருத்துவ குணங்கள்

இதில் பொட்டாசியம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது. மிக முக்கியமாக Stroke எனப்படும் பக்கவாதத்தை வராமல்பாதுகாக்கிறது.

இது நீர்ப்பழம் என்பதால் இதை உண்பதால் உடம்பின் உஷ்ணத்தை குறைக்கிறது. அல்சர், சிறுநீர் சம்பந்தமான நோய், உணவு செரிப்புதன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் உபயோகமாகிறது.பெண்களுக்கு ஏற்ப்படும் Cervical Cancer மற்றும் osteoporosis எனப்படும் நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது.இந்த பழத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதோடு அழகும் மேம்படும். இதில் அதிகமாக வைட்டமின் ஏ மற்றும்வைட்டமின் சி உள்ளதால் சருமம் ஆரோக்யமாகவும், தோல் மினு மினுப்புகூடும்.



உடல் சோம்பலை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உடல் எடை குறைக்க இது உதவுகிறது. முலாம் பழம் கோடை காலத்தில் மிக எளி தாக கிடைக்கக் கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.முலாம் பழத்தில் fibre என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால் மலசிக்கலை போக்குகிறது. இதில் Folic Acid உள்ளதால் கர்ப்பமான பெண்கள் சாப்பிட வேண்டியஅருமருந்து இது. இந்த பழம் கிட்னியில் உள்ள கல்லை கரைக்கக்கூடியது. மேலும் முதுமைகாலத்தில் ஏற்ப்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.

• மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.

• கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு     முலாம்பழம் மிகவும் ஏற்றது.

• முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.


• சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இதற்கு முலாம்பழத்தை  சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.

• புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், விட்டமின் ஏ, சி என்று பலவிதச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

• முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்.

No comments:

Post a Comment

Adbox