"

Tuesday, April 2, 2019

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சந்திக்கும் முதுகு வலிக்கான எளிமையான தீர்வு...!

அன்றாடம் வேலைக்கு செல்லுவோர் சந்திக்கும் பிரச்சினைகளின் முதுகுவலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவை பிரதனமாகும். 


முதுகுவலி வந்தாலே நம்மை எந்த  செய்ய விடமால் முடக்கிவிடுகின்றது. குறிப்பாக சிலருக்கு நிற்கவோ, உட்காரவோ கூட முடியாமல் முதுகு வலி எடுகின்றது. இதற்கு நாம் வலி நிவராணிகளை அடிக்கடி உபயோகிப்பதுண்டு.  அந்தவகையில் வலி நிவாரணியின்றி முதுகு அல்லது இடுப்பு வலியை ஒரு இயற்கை பானத்தைக் குடிப்பதன் மூலம் இந்த பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

இங்கு முதுகு அல்லது இடுப்பு வலியைப் போக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பால் - 200 மிலி பூண்டு - 4 பற்கள் தயாரிக்கும் முறை முதலில் இப்படிலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும்.  பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும். இந்த பாலை தினமும் குடிக்க வேண்டும்.  குடிப்பதால், இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணர்வீர்கள்.  இந்த பானம் இடுப்பு மூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும்.

மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. விருப்பமுள்ளவர்கள், இந்த பானத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.  குடிப்பதோடு, இடுப்பு மூட்டுக்குரிய நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், இன்னும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Adbox