"

Thursday, March 14, 2019

லிச்சி பழத்தில் உள்ள நன்மைகள் என்ன என்று தெரியுமா



லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். 

ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.கோடைக்காலத்தில் வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஓர் பழம் தான் லிச்சி. சீனாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த லிச்சி இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் கோடைக்காலத்தில் விலை மலிவில் கிடைக்கும். பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் இப்பழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இது உடல் பருமன், புற்று நோயை தடுப்பது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, எலும்புகளை வலுவாக்குவது, செரிமானத்தை சரிசெய்வது,இரத்த அழுத்தத்தை குறைப்பது, இரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்ற பல்வேறு நன்மைகளை இந்த பழம் சாப்பிடுவதால் கிடைக்கின்றது.பெரும்பாலும் உலர் லிச்சி பழங்களில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளன. 

லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும். லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு. லிச்சிப் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.

லிச்சியில் காணப்படும் பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் ப்ரோ அந்தோசைடனின் என்ற கூறுகளும் வைட்டமின் சியை விட அதிக சக்தி வாய்ந்தது.உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் மற்றும் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கின்றன. இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகளால் புற்று நோய், இதய நோய், குடல் இயக்க மந்த நிலை, விரைவான வயது மூப்பு, போன்றவை ஏற்படும். இந்த பாலிபீனாலிக் கூறுகளால் இந்த அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.

லிச்சியில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. இதன்மூலம் ஹைபர் டென்ஷன் குறைக்கப்படுகிறது. பொட்டாசியம் ஒரு சிறந்த குழல் விரிப்பியாக செயல்படுவதால், இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் ஒடுக்கமான தன்மை குறைகின்றது.இதன்மூலம் இதய அழுத்தம் குறைகிறது, உலர் லிச்சியின் பொட்டாசியம் அளவு பிரெஷ் லிச்சியை விட 3 மடங்கு அதிகமாகும்.



No comments:

Post a Comment

Adbox