"

Wednesday, March 13, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 13 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 13 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1639 – ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.

1781 – வில்லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.
1811 – பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
1881 – ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான். (ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).
1900 – பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.
1908 – நெல்லை க்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது.

1921 – மொங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
1943 – ஜேர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
1954 – வியட்நாம் போர்: வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.
1957 – கியூபா அதிபர் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1979 – கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1996 – ஸ்கொட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
1997 – அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன.
2003 – இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகாள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
2007 – 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்.


பிறப்புக்கள்
1733 – ஜோசப் பிரீஸ்ட்லி, ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர் (இ. 1804)
1839 – ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904)
1843 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (இ. 1909)

இறப்புக்கள்
1936 – கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (பி. 1876)

1975 – ஐவோ ஆண்டிரிக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)

No comments:

Post a Comment

Adbox