"

Friday, March 1, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 1 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 1 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1565 – ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
1815 – இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.
1873 – முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
1896 – ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.
1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.
1912 – முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.
1936 – ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் போர் ஆரம்பமானது.
1949 – டச்சுக்களிடம் இருந்து யாக்யகர்த்தாவை இந்தோனீசியா கைப்பற்றியது.
1953 – ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
1954 – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
1975 – ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1977 – சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
1980 – சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1981 – ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
2002 – ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.


பிறப்புக்கள்
1647 – ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கலைச் சேர்ந்த மதப்போதகர் (இ. 1693)
1910 – எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)
1910 – ஆர்ச்சர் மார்ட்டின், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2002)
1917 – கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (இ. 2003)
1921 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)
1922 – இட்சாக் ரபீன், இஸ்ரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)
1951 – நிதிஷ் குமார், இந்தியாவின் முன்னாள் அமைச்சர்
1953 – மு. க. ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், உள்ளாட்சித் துறை அமைச்சர்
1968 – குஞ்சராணி தேவி, இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை
1973 – கிரிஸ் வெபர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்.


இறப்புகள்
1940 – அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)
2015 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)


சிறப்பு நாள்
பொசுனியா எர்செகோவினா – விடுதலை நாள் (1992)
தென் கொரியா – விடுதலை நாள்.

No comments:

Post a Comment

Adbox