"

Thursday, February 28, 2019

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படைகள் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
1784 – ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1844 – USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1897 – மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரெஞ்சுப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன் என்ற கப்பல் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் ஜப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1975 – லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டொக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
1998 – கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
2002 – அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.

பிறப்புகள்
1929 – பிராங்க் கெரி, கட்டிடக்கலைஞர்
1931 – துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)
1933 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
1953 – பால் கிரக்மேன், அமெரிக்க பொருளியல் நிபுணர்
1969 – உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)


இறப்புகள்


1869 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் (பி. 1790)
1936 – சார்ல்ஸ் நிக்கோல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1866)
1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் (பி. 1884)
2006 – ஓவன் சாம்பர்லெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1920)


சிறப்பு நாள்
இந்தியா – தேசிய அறிவியல் நாள்.

No comments:

Post a Comment

Adbox