"

Friday, January 11, 2019

பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களுக்கு 'பயோமெட்ரிக்'


பள்ளிகள்  மற்றும்  அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவு முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவி பொருத்த கடந்த 2018 அக்டோபர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, இயக்குநர் ராமேஸ்வர முருகன் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பயோமெட்ரிக் கருவி, 'கூரியர்' மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, வரும் 11ம் தேதிக்குள், வட்டார வாரியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 

ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் கருவிகள் விநியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பொருத்தி, இதுகுறித்த அறிக்கையை வரும் 12ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Adbox