"

Tuesday, January 8, 2019

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!


இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு ஆகியோரின் கோரிக்கையேற்று, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி என்னும் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது 2 ஆக பிரிக்கப்படுகிறது.கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.இதன் மூலம் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது.




No comments:

Post a Comment

Adbox