"

Thursday, January 31, 2019

டிராய் புதிய உத்தரவு விரும்பி சேனலுக்கு கட்டணம் செலுத்தும் முறைகு அனுமதி


தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய உத்தரவால் பிப்ரவரி 1 ம்  தேதி முதல் மக்கள் தங்களுக்கு பிடித்தமான தொலைக்காட்சி சேனல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும் என உத்தரவிட்டுள்ளது.


அதன்படி வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 155 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேனல்கள் உடன் ஒளிபரப்ப கேபிள்டிவி ஆபரேட்டர் மற்றும் டிடிஎச் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களுக்கு தேவையான சேனல்களை  மட்டுமே பார்க்கும் வண்ணம் வழிவகை செய்துள்ளது. 

இதனால் வரை தேவையற்ற சேனல்களுக்கு கட்டணம் செலுத்தி வந்த முறையிலிருந்து தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தேர்வு செய்து அந்த சேனல்கள் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி மாதம் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேவைகளை அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கட்டண விவரங்களை கண்டறிவதற்கு வசதியாக புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் சென்று மக்கள் தங்களுக்கு தேவையான சேனல்களின்  கட்டணத்தையும் அறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளது.

கிளிக் செய்யவும்

மேலும் விருப்பமான டிவி சேனல்களை தேர்வு செய்ய பிரத்தியேக ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முகவரியில் ஒவ்வொரு டிவி சேனல்களின் கட்டண விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Adbox