"

Sunday, December 23, 2018

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் - இயற்கை மருத்துவம்


விஞ்ஞானம் மூலம் கண்டறிவதற்கு முன்பே பல உண்மைகளை நம் முன்னோர் என்றோ நெல்லிக்காயினைப் பற்றி அறிந்து வைத்துள்ளனர். இன்று மருத்துவ விஞ்ஞானம் நெல்லிக்காயில் அதிக வைட்டமின் ‘சி’ சத்து இருப்பதனை அறிந்து நெல்லிக்காயினை இந்தியாவின் பொக்கிஷமாகக் கூறுகின்றது.


* மிக அதிக வைட்டமின் ‘சி’ சத்து, இருப்பதால் நன்றாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
* அன்றாடம் அல்லது அடிக்கடி நெல்லிக்காய் பயன்படுத்துபவர்களுக்கு காலப்போக்கில் மிக நல்ல ஆரோக்கியத்தினையும், நோய் எதிர்ப்பு சக்தியினையும் அளிக்கின்றது.
* திசுக்களின் அழிவினை தடுப்பதால் வயது கூடாத இளமை தோற்றம் பெறுகின்றனர்.
* புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.
* நெல்லிக்காய் அசிடிடி (நெஞ்செரிச்சல்) வயிறு வீக்கம் இவற்றினை தவிர்க்கும்.
* கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும்.
* சிறுநீரக நச்சுக்களை நீக்கும்.
* தொண்டை கிருமி பாதிப்பினை தவிர்க்கின்றது.
* எலும்பு ஆரோக்கியம் காக்கப்படுகின்றது.
* அலர்ஜி, ஆஸ்துமா, தொடர் இருமல், சுவாசக் குழாய் வீக்கம் இவற்றிலிருந்து காக்கின்றது.
* நரம்புகளுக்கு வலுவூட்டி பக்க வாத நோயிலிருந்து காக்கின்றது.
* தூக்கமின்மை, மன உளைச்சல் நீக்குகின்றது.
* ஞாபக சக்தி கூடுகின்றது.
* கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது.
* இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
* இருதய சதைகள் வலுப்பெறுகின்றன.
* சர்க்கரை அளவு ரத்தத்தில் சீராய் இருக்க உதவுகின்றது.
* சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கின்றது.
* மாவுச் சத்து செரிமானத்திற்கு உதவுகின்றது.
* பித்த நீர் பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது.
* செரிமான சக்தியினை கூட்டுகின்றது.
* உடல் தளர்ச்சி அடையாது இருப்பதால் இளமை நிலைக்கின்றது.
* சருமத்தில் தடவ கரும்புள்ளி, திட்டுகள் நீங்குகின்றது.
* தலைமுடியில் தடவ முடி வலுபெறும்.
* ரத்த சிவப்பணுக்கள் கூடுகின்றது.
* கண் கோளாறுகளைத் தவிர்க்கின்றது

No comments:

Post a Comment

Adbox