"

Saturday, April 7, 2018

கருமஞ்சள் மூலிகை மகத்துவம் கொண்ட இயற்கை வரம் தரும் பொக்கிஷம்...!





சித்தமருத்துவத்தில் கருமஞ்சள் ஒரு சிறப்பான சிறப்பான மூலிகையாக பயன்படுகிறது. இது அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளில் காணப்படும் அரியவகை  தாவரம்  இரண்டு மீட்டர்வரை வளரும்  இந்த செடியின் கிழங்கு மகத்துவம் மிக்க மூலிகை சில இடங்களில் இந்த கருமஞ்சள் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது குறிப்பாக கேரளத்தில் அதிகம் உள்ளது.

கருமஞ்சளில், வேதி எண்ணை, மாவுச்சத்து, தாதுக்கள், கொழுப்பு, பசை, ரென்மின், ஜெர்மாக்ரின் கார்டியோன், ஆல்கலாயிடுகள், குர்குமின், மற்றும் டானின் நிறமிகள் நிறைந்துள்ளன.

கருமஞ்சள் பசியின்ன்மையை குணப்படுத்தும் தன்மை உள்ளது. குழந்தைகள் பசியின்மையால் சாப்பிட மறுக்கும்போது, அதை சரிசெய்து, பசியைத் தூண்டுகிறது. கருமஞ்சள் கிழங்கை, நீரில் கொதிக்கவைத்து, அதைக் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் அழிந்து பசியின்மை நீங்கி, பசி அதிகரிக்கும்.பசியைத்தூண்டி உடல்நலத்தை காப்பது மட்டுமன்றி, சொறி சிரங்கு, புண்கள், படர்தாமரை போன்ற சரும கிருமிகளால் ஏற்படும் தோல்வியாதிகளையும் சரி செய்கிறது.கருமஞ்சள் வேரை குடிநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் பெண்களின் மாதாந்திர விலக்கின் வலியைப் போக்குகிறது.

இருமலைப் போக்க, கருமஞ்சள் கிழங்கை சுத்தம் செய்து சாப்பிட்டுவரலாம். கருமஞ்சள், சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கென்குர் வாசனை இஞ்சி இவற்றை நீரிலிட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் சுண்டிவந்ததும், குடித்துவர, இருமல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் விரைவில் குணமாகிவிடும்.

கருமஞ்சள் கிழங்கு மற்றும் சில பப்பாளி இலைகளை எடுத்துக்கொண்டு, நன்கு சுத்தம் செய்தபின், அவற்றை நன்கு அரைத்து, விழுதாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளர் வெந்நீரில் இந்த விழுதை இட்டு, நன்கு கலக்கி, அந்த குடிநீரை தினமும் தொடர்ந்து குடித்து வர வேண்டும். இதன்மூலம், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் விலகி, இரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

கருமஞ்சளை துருவி பின் நன்கு நீரில் அலசி முட்டை மஞ்சள் கருவுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது மூல வலி குணமாகிறது. இதில் உள்ள வேதி பொருள்கள் கலீரல் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே அளவோடு பருக அறிவுறுத்தபடுகிறது.




No comments:

Post a Comment

Adbox