"

Friday, March 22, 2019

உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருள் , அதன் மருத்துவ குணங்களும் பயன்களும்


குங்குமப்பூ ஒரு விலையுயர்ந்த மசாலா என்று அனைவரும் அறிவோம், ஆனால்  இது உலகின் மிக விலையுயர்ந்த மசாலா என்று நமக்கு தெரியுமா?. 


குங்குமப்பூ முதல்  முதலில் ஈரானில் பயிரப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், நம் நாட்டின் காஷ்மீருக்கும் இந்த மலர் உரித்ததாகும். குங்குமப்பூ என்பது சாஃப்ரன்  பூக்களின் சூலகமுடிகளாகும் . இவை கடந்த 3000 ஆண்டுகளாக  பயன்பாட்டில் உள்ளது.


ஆண்டுதோறும் ஓரு வாரம் மட்டும் இந்த பூ பூத்து வருகிறது. அதுமட்டுமின்றி ஓர் பூவில் இரண்டு சூல் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. தற்பொழுது, குங்குமப்பூவின் பெரும்பகுதி ஈரானிலும் , பத்து சதவிகிதம் காஷ்மீரில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 454 கிராம் உலர்ந்த குங்குமப்பூ தயாரிக்க , 75000 சாஃப்ரன்  மலர்கள் தேவைப்படும், சாஃப்ரன்  பூக்கள் தரையில் இருந்து ஆறு அங்குலங்கள் மட்டுமே வளர்வதால், இவ்வகை  பூக்களை பராமரித்து வளர்ப்பது மிகவும் கடினமான செயலாக இருந்து வருகிறது. இதுபோன்ற பல்வேறு காரணிகள் இதன் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது

எது ஒரிஜிணல்:

குங்குமப்பூ உண்மையா, போலியா? என்பதை சரிபார்க்க சிறந்த வழி அதன் வாசனை மட்டுமேயாகும்.
இனிப்பு மற்றும் கசப்பு சுவையுடன் இருந்தால் தான், அது உண்மையான குங்குமப்பூ ஆகும்.
மேலும்  சரிபார்க்க மற்றொரு வழி தண்ணீரில் குங்குமப்பூவை ஊறவைக்க வேண்டும், உண்மையான ஒன்று அதன் நிறத்தை வெளிவிட்டாலும், தனது நிறத்திலிருந்து மாறுபடாது  ஆனால்  போலி குங்குமப்பூ ,வெள்ளை நிறமாக மாறும் தன்மையுடையது.


குங்குமப்பூவில் உள்ள நன்மைகள்:

மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது. வயது கூடும்போது வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன. குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. வயிற்றின் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் வலி, அசி டிடி, சிறுநீரகம் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது. குங்குமப் பூ ஒரு ரத்த சுத்தி.

புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. இலுப்பு, கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. குங்குமப்பூ என்பது ஒரு மசாலா பொருள் , ஆனால் மருந்துவ குணம் நிறைந்துள்ளது என பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும்  குங்குமப்பூ பொதுவான மன அழுத்தம் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களுக்கு முன்பாக ஏற்படும் மன அழுத்தம் , மற்றும்  பொதுவான எடை இழப்பு ஆகியவற்றை குணப்படுத்த உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பேறு கால நாட்களில் குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் பிறக்க உள்ள குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் நம் நாட்டு மக்களிடையே நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

Adbox